டிக் -டாக் செயலிக்குத் தடை விதிக்க தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:
டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்
படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்திரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்றார்.
அப்போது, அமைச்சர் மணிகண்டன் எழுந்து கூறியது:
டிக்-டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்பது உண்மைதான். இது தொடர்பாக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர். புளுவேல் கேம்க்கு தடை விதித்ததுபோல மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, டிக் - டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.