போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து 

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து 

சென்னை: அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதன் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, நீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com