காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் மாணவர்களுக்கு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத


காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (ஐஐடிடிஎம்) நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அங்கு படிப்பில் சிறந்து விளங்கும் 10 சதவீத பி.டெக். மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐஐடி-யும், காஞ்சிபுரம் ஐஐடிடிஎம் நிறுவனமும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஐஐடிடிஎம் நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் சிறந்து விளங்கும் முதல் 10 சதவீத மாணவர்கள் அவர்களுடைய 6 ஆம் பருவத் தேர்வுக்குப் பிறகு சென்னை ஐஐடி-யில் நேரடி பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பிறகு அவர்கள் பி.டெக். படிப்புக்கான 7 ஆம் பருவம், 8 பருவத் தேர்வுகளை சென்னை ஐஐடி-யில் முடித்துக்கொள்ள முடியும்.
அதோடு, இரு நிறுவன ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டு ஆராய்ச்சி, கல்வித் திட்டங்களிலும் ஈடுபட இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com