காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
"அவந்திபூராவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அதேசமயம், நாட்டுக்காக சேவையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் திமுக உறுதியாக துணை நிற்கிறது" என்றார்.