சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கடந்த சில தினங்களாக சிறிதளவிலான மாற்றங்களை கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு


கடந்த சில தினங்களாக சிறிதளவிலான மாற்றங்களை கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்தது.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87-க்கும் மேல் அதிகரித்தது. டீசலும் ரூ.80-ஐ எட்டியது.

இந்தச் சூழலில், கச்சா எண்ணெயின் விலையில் காணப்பட்ட சரிவு காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.16 வரையிலும், டீசல் ரூ.14 வரையிலும்  குறைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சற்று சரிவடைந்து வந்தது. அதன் தாக்கம் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் எதிரொலித்தது. பின்னர், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலையில் சிறிதளவில் குறைந்தும், மாற்றங்களின்றியும் இருந்து வந்தது. 

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.06 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 69.37 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com