அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார்.
இதுகுறித்து தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
மேல்சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளபடுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் சென்னை திரும்பியதும் நாடாளுமன்ற கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.