புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு சென்னையைச் சேர்ந்த திருநங்கைகள் மெழுகுவர்த்தி ஏத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி வியாழக்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனம் குவிந்து வருகிறது.