தருமபுரி அருகே கோட்டப்பட்டியில் டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் சிட்டானூர் பகுதியில் கோட்டப்பட்டியில் டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ரூ. 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர்.
காலில் குண்டடிப்பட்ட டாஸ்மாக் ஊழியர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தி நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக, தருமபுரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.