தொண்டியில் வெடிபொருள்கள் கடத்த முயன்றவர் கைது

திருவாடானை அருகே கடற்கரை பகுதியில் படகின் மூலம் வெடிபொருள்கள் கடத்த முயன்ற ஒருவரை கடலோர காவல் படையினர் சனிக்கிழமை கைது செய்து, வெடிபொருள்களை பறிமுதல் செய்தனர்.
தொண்டியில் வெடிபொருள்கள் கடத்த முயன்றவர் கைது

திருவாடானை அருகே கடற்கரை பகுதியில் படகின் மூலம் வெடிபொருள்கள் கடத்த முயன்ற ஒருவரை கடலோர காவல் படையினர் சனிக்கிழமை கைது செய்து, வெடிபொருள்களை பறிமுதல் செய்தனர்.
 திருவாடானை அருகே புதுக்குடி கடற்பகுதியில் படகில் வெடிபொருள்களை கடத்துவதாக தொண்டி கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.
 இதன் பேரில் சனிக்கிழமை காலையில் அப்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றவரிடம் நடத்திய சோதனையில், அவரிடம் 42 டெட்டனேட்டர்கள், 45 ஜெலட்டின் குச்சிகள் ஆகியன இருப்பது தெரியவந்தது. அவற்றை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில், அவர், புதுக்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் கார்மேகம் (55) என்பதும், படகின் மூலம் வெடிபொருள்களைக் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கடலோர காவல் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com