ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: குமரிக்கடல் முதல் தெலங்கானா வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com