திமுகவுடன் தோழமையுடன் இருக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இடையப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: திமுகவுடன் தான் தோழமையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத கருத்துக்களை இணையதளங்களில் வெளியிட வேண்டாம். ஏற்கெனவே 8 முறை தேர்தலைச் சந்தித்த நமக்கு தேர்தல் ஒன்றும் புதியது அல்ல. ஊடகங்கள் மிகைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டாலும், நமக்கான தெளிவான கண்ணோட்டத்தில் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். மேலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் 41 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது. இதற்காக மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.