பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கல்வீச்சு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுச் சிறைத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி முன்னாள்
பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கல்வீச்சு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுச் சிறைத் தண்டனையை ரத்துச் செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

1998-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பு வழக்குரைஞர் ஆஜராகி, இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு வந்ததுமே அமைச்சர் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா செய்துள்ளார். சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், மேல்முறையீடு வழக்கு விசாரணையில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும். இந்த வழக்கு தொடர்பாக, 4 வாராத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com