மக்களவை கூட்டணி: ஓரிரு நாளில் முடிவு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மக்களவை கூட்டணி: ஓரிரு நாளில் முடிவு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை இரவு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியது:-
ஏற்கெனவே சொன்னபடி, அதிமுக சார்பில் மெகா கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். உறுதியாக ஓரிரு தினங்களில் உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல முறையில் அந்த அறிவிப்பு அமையும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
பாஜக தலைவர்கள்: அதிமுகவுடனான கூட்டணி குறித்து ஏற்கெனவே பாஜக தலைவர் ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடித்துள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் தில்லி தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com