நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக த.மா.காவுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுவுடன் கூட்டணியில் இணைவது நேற்று உறுதியானது. அதன்படி, பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று கூட்டணி தொடர்பாக த.மா.காவுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் த.மா.கா சார்பில் விடியல் சேகர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.