சென்னை: சுற்றுசூழல் ஆர்வலர் முகிலனைக் கண்டுபிடித்து மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சுற்றுசூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் சூழலியல் பாதிப்புகளை வெளிகொணர பாடுபட்டவர்களில் ஒருவருமான திரு.முகிலன் அவர்களை காணவில்லை என்ற செய்தி பத்திரிக்கை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பல நாட்களாக செய்திகள் வருகின்றன.
அவரது உயிர் பற்றிய அச்சம் குறித்து கருத்துகளும் வெளியாகிறது. அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், நாட்டை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்துகளை வெளிட்டு வருகின்றார்.
காணாமல் போன அவரை கண்டுபிடித்து மக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.