கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியமளித்த சுவாதியைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

கோகுல்ராஜ் கொலை வழக்கில்,  பிறழ் சாட்சியம் அளித்த அவரது தோழி சுவாதியை கைது செய்ய நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.


கோகுல்ராஜ் கொலை வழக்கில்,  பிறழ் சாட்சியம் அளித்த அவரது தோழி சுவாதியை கைது செய்ய நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம்,  ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.  இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சாட்சியம் அளிக்க சுவாதி அழைக்கப்பட்டார்.  நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், சம்பவத்தன்று தான் கோயிலுக்குச் செல்லவில்லை என்றும், கோகுல்ராஜ் தன்னுடன் படித்த மாணவர் என்ற அடிப்படையில் மட்டுமே தெரியும் என்றும்,  சிபிசிஐடி போலீஸார் அளித்த காட்சிப் பதிவுகளை கொண்டு தன்னால் யாரையும் அடையாளம் காட்ட இயலாது எனவும் பிறழ் சாட்சியம் அளித்தார்.
இதனிடையே,  பிறழ் சாட்சியம் அளித்த சுவாதியை,  மறு விசாரணைக்கு அழைக்கக் கோரி சிபிசிஐடி தரப்பில்,  நாமக்கல் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில்  மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது.  அப்போது சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  அவர் தரப்பு வழக்குரைஞரும் உரிய பதில் அளிக்கவில்லை.  இதையடுத்து, வழக்கு 20-ஆம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.  புதன்கிழமையும் விசாரணைக்கு சுவாதி ஆஜராகவில்லை.  அதைத் தொடர்ந்து,  நீதித் துறை நடுவர் வடிவேல்,  சுவாதியைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததுடன்,  மார்ச் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com