திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை, புதுமையான எண்ணங்களை அனுப்பலாம்: மு.க.ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை, புதுமையான எண்ணங்களை அனுப்பலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை, புதுமையான எண்ணங்களை அனுப்பலாம்: மு.க.ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை, புதுமையான எண்ணங்களை அனுப்பலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில்,
‘தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு!’

'உங்கள் எண்ணங்களும் அரசேற அரிய தருணம்.

உங்கள் கனவுகளையும், புதுமையான எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பகிர்ந்துகொண்டு எங்களோடு கரம் கோர்க்க வாருங்கள்.

அடிமை அரசால் வளர்ச்சி என்கிற பாதையில் அதள பாதாளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டை முன்னேற்றுவதில், உங்களுடைய கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்.

உங்களுடைய கருத்துகளை எங்களுக்கு அனுப்ப - dmkmanifesto2019@dmk.in

மேலும், இந்தப் பதிவின் கீழும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

அதேபோல், #DMKmanifesto2019 என்கிற #டேக்கிலும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யலாம். (பிப்ரவரி 28 - 2019 க்குள் அனுப்பலாம்). இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com