உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், புதன்கிழமை வீடு திரும்பினார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், வேறு எந்த விதமான மருத்துவ சிகிச்சைகளும் தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு செவ்வாய்க்கிழமை மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் அமைச்சர் இருந்தார். இந்தச் சூழலில், அவர் உடல் நலம் தேறியதைத் தொடர்ந்து புதன்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினார்.