5 தொகுதிகள் தானே என்று சோர்ந்து விடாதீர்: அமித்ஷா

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.


பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.  அரங்கில் பாதுகாப்புக்கு இருந்த  காவல் துறையினர் மற்றும்  நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் வெளியேற்றப்பட்டனர். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாக பின்னர் கட்சி வட்டாரங்கள் கூறியது:
மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை பாஜக அமைத்திருக்கிறது.  5 தொகுதிகள் மட்டும்தான் நமக்கு கிடைத்திருக்கிறது என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக உழைக்க வேண்டும்.  இன்னும் 5 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறும்.  அப்போது நமது கை ஓங்கியிருக்கும்;  நாம் நினைத்தது நடக்கும்.
 முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக்காட்டிலும் விலைவாசி தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என அமித்ஷா பேசியதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com