ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அதிமுக எம்.பி அன்வர் ராஜா அதிரடி பேச்சு

தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக மக்களவை உறுப்பினர்
ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அதிமுக எம்.பி அன்வர் ராஜா அதிரடி பேச்சு


சென்னை: தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியின், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா. இறைவனுக்கு எதிரான முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றினால் நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என பாஜகவிற்கு சாபம் கொடுத்து கடுமையாக பேசிய அன்வர் ராஜா, தற்போது பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அன்வர் ராஜா பேசுகையில், தேர்தல் காலத்தில் வைக்கக்கூடிய, தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேர லாப-நஷ்ட கணக்கு. நாடாளமன்றத்திற்குள் அல்லது சட்டப்பேரவைக்குள் அதிக எண்ணிக்கையில் நமது உறுப்பினர்களை அனுப்புவதற்காக போடப்பட்டுள்ள லாப நஷ்ட கணக்கு அது. 

ஆளும் அரசை காப்பாற்ற வேண்டும். இந்த அரசு அதிகாரத்தை 'அம்மா' நமக்கு அளித்தார். அதைக் காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தனது கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கொள்கையில் மாற்றமின்றி தேர்தல் கால உடன்பாடுதான் இது. எனவே இதை வைத்து நமது கொள்கைகளை சந்தேகப்பட வேண்டாம் என அன்வர் ராஜா தெரிவித்தார். அன்வர் ராஜாவின் கூட்டணி குறித்த பேச்சு அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com