கயத்தாறு: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரைச் சார்ந்த சுப்பிரமணி அவர்களின் இல்லத்துக்கு, இன்று (24-02-2019) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.