காலமானார் மணக்கால் எஸ்.ரங்கராஜன்

மூத்த கர்நாடக இசைக் கலைஞர் மணக்கால் எஸ்.ரங்கராஜன் (96) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் செவ்வாய்க்கிழமை காலமானார். 
காலமானார் மணக்கால் எஸ்.ரங்கராஜன்


மூத்த கர்நாடக இசைக் கலைஞர் மணக்கால் எஸ்.ரங்கராஜன் (96) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் செவ்வாய்க்கிழமை காலமானார். 
அவருக்கு மனைவி பத்மா ரங்கராஜன்,  மகன் கர்நாடக இசைக் கலைஞர் மணக்கால் ஸ்ரீராம்  மற்றும் இரு மகள்கள் உள்ளனர். 
மறைந்த எஸ்.ரங்கராஜன் கர்நாடக இசைக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.  பல வெளிநாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.  இசைத் துறையில் அவரது பங்களிப்புக்காக  தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் விருதுகளைப் பெற்றுள்ளார்.  அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  தொடர்புக்கு: 9840557119.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com