மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை நொடிக்கு 28 கன அடியாகச் சரிந்தது. இந்நிலையில் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 1,000 கன அடியிலிருந்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியும் வாய்ப்புள்ளது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.55 அடியாகவும், நீர் இருப்பு 31.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.