திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? என டிடிவி தினரகனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பதில் அளித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
இந்நிலையில், நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து வருபவர் டிடிவி தினகரன். தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது. ஆர்.கே. நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அவரை அழைக்கிறார்கள்.
மேலும், திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? என்று தினகரனின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.