சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 24 கிலோ தங்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்தது தொடர்பாக இரண்டு தென்கொரிய பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.