கொடநாடு விவகாரம்: மேத்யூஸை பிடிக்க தனிப்படை தில்லி விரைவு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுப்பதற்காகவே அவர்கள் சென்றதாகவும் விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு விவகாரம்: மேத்யூஸை பிடிக்க தனிப்படை தில்லி விரைவு

கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட விடியோ காட்சியில் தன்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது உண்மைக்கு மாறானது என முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். மேலும், அதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் நடந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இதில், கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் இதுவரை நீதிமன்றத்தில் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கு வரும் பிப்ரவரி 2-இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை ஞாயிற்றுக்கிழமை தில்லி விரைந்துள்ளது. அதுபோன்று கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சயான், ரவி ஆகியோரை பிடிக்கவும் மற்றொரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

முன்னதாக, 2017-ல் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதும், எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தான் நடத்திய புலனாய்வை ஆவணப் படத்தை பத்திரிகையாளர் மேத்யூஸ் வெளியிட்டார்.

கட்சி நிர்வாகிகள் தொடர்பான ஆவணங்களை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுப்பதற்காகவே அவர்கள் சென்றதாகவும் விடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com