தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத்,
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டது.