சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம்: ஜன.16-இல் முதல்வர் திறந்துவைக்கிறார்

சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 16 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம்: ஜன.16-இல் முதல்வர் திறந்துவைக்கிறார்

சேலத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 16 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
 சேலத்தில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாநகரில், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.
 அதைத்தொடர்ந்து, 2018 ஏப்ரல் 29- ஆம் தேதி மாநகராட்சி அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மணிமண்டபம் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறார்.
 நிழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com