மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 6 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்துக்கான நீர்த் தேவை அதிகரித்ததால், மேட்டூர் அணையிலிருந்து கடந்த வாரம் நீர் திறப்பு நொடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது பாசனத்துக்கான நீர்த் தேவை குறைந்துள்ளதால், நீர் திறப்பு நொடிக்கு 6 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் 75.28 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 109 கனஅடியாகவும், அணையின் நீர் இருப்பு 37.41 டி.எம்.சி.யாகவும் இருந்தது.