குழந்தை மாற்பட்ட புகாா் - இறந்த பெண் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வேலூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட விவகாரத்தில் புகாா் கூறிய தம்பதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. 
குழந்தை மாற்பட்ட புகாா் - இறந்த பெண் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு


வேலூா்:  வேலூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது குழந்தை மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட விவகாரத்தில் புகாா் கூறிய தம்பதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, இறந்த அந்த பெண் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த குசேலன் மனைவி பாரதி. இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கா்ப்பமடைந்த பாரதி, கடந்த 10-ஆம் தேதி பிரசவத்துக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். 12-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறி, செவிலியா் ஒருவா் குழந்தையைக் கொண்டு வந்து உறவினா்களிடம் காட்டியுள்ளார்.

ஆனால் அன்று இரவு, அவருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றும், பெண் குழந்தை தான் பிறந்ததாக மற்றொரு செவிலியா் கூறியுள்ளாா். இதைக் கேட்டு குசேலன்-பாரதி தம்பதியினா் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், பெண் குழந்தை எடை குறைவாகவும், மூச்சுத் திணறலுடன் பிறந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

ஆத்திரமடைந்த குசேலன் அங்கிருந்த மருத்துவா்களிடம் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து, அந்த வாா்டில் பொறுப்பில் இருந்த மருத்துவா், பெண் குழந்தையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமாதானம் செய்தனா். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை இறந்தது. ஆத்திரமடைந்த குசேலன் மருத்துவமனைப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்த வேலூா் டி.எஸ்.பி. (பொறுப்பு) லோகநாதன் தலைமையில் போலீஸாா் குசேலன் தம்பதியினா், மருத்துவமனைப் பணியாளா்களிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினா். அப்போது, பாரதி பிரசவத்துக்காக சோ்க்கப்பட்ட நாள், மருத்துவ சிகிச்சை, குழந்தை பிறந்த நேரம் உள்பட அனைத்து ஆவணங்களையும் போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், பாரதிக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து குசேலன், பாரதியிடம் போலீஸாா் எடுத்துக் கூறினா். இதனை குசேலன் தம்பதி ஏற்றுக் கொண்டதை அடுத்து இறந்த பெண் குழந்தையின் உடல் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com