சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு விழா எதுவுமின்றி இன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க முதலில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் விழா ஏதுமின்றி வளைவை திறக்க அனமதி அளித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விழா எதுவுமின்றி எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு எம்ஜிஆர் வளைவு திரைகள் அகற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.