பிரதமர் மோடியை முதன்மைப்படுத்தும் கட்சிகளோடு கூட்டணி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை முதன்மைப்படுத்தும் கட்சிகளோடு கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை முதன்மைப்படுத்தும் கட்சிகளோடு கூட்டணி


மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை முதன்மைப்படுத்தும் கட்சிகளோடு கூட்டணி அமையும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரையில் பெருங்குடியை அடுத்து உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் 27-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை பார்வையிட்டார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
மதுரையில் வரும் 27-ஆம் தேதி பாஜக சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை முதன்மைப்படுத்தும் கட்சிகளோடு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. அரசியலில் யார் விலகுகிறார்கள், நெருங்குகிறார்கள் என்பதை இந்த மைதானத்தில் முடிவெடுக்க முடியாது. அரசியல் நன்றாக தெரிந்தவர்களுக்கு நிலைமைகள் தொடர்ந்து மாறுவது தெரியும். மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் 2014 -இல், 20 சதவீதம் வாக்குகள் பெற்று புதுச்சேரி உள்பட மூன்று இடங்களை எங்கள் கூட்டணி கைப்பற்றியது. 
கஜா புயல் நிவாரணத்தைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. விவரம் தெரிந்த அரசியல் தலைவர்கள் எப்படி நடப்பார்களோ, அவ்வாறு பாஜக தலைவர்கள் நடந்து வருகிறார்கள். 
பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களைப் பிடிக்கும். பிரதமரின் தமிழக வருகைக்குப் பின் இன்னும் அதிக இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு பெருகி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com