நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 18 காசுகள், டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கடந்த சில மாதங்களாக குறையத் தொடங்கியது. இடையே சில தினங்கள் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 18 காசுகளும், டீசல் விலை 21 காசுகளும் அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.41 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 68.83 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோன்று தில்லி மற்றும் மும்பையிலும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70.72 ஆகவும், டீசல் ரூ. 65.16 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 76.35 ஆகவும், டீசல் ரூ. 68.22 ஆகவும் விற்பனையாகிறது.