ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வரும் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தீா்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அண்ணாநகரில் உள்ள சிஐடியூ அலுவலக வளாகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: அங்கன்வாடி பணியிடங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவது கண்டிக்கத்தக்கது. பள்ளிகளை இணைத்தல் என்ற பெயரில் கிராமப்புற பள்ளிகளையும், 3500 சத்துணவு மையங்களையும் மூடும் முடிவை அரசு கைவிடவேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி முதல் (செவ்வாய்க்கிழமை) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்பது.
ஏற்கெனவே, நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தல் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.