மைசூரு வரை நீட்டிக்கப்பட்ட ரயிலின் நேரம் அறிவிப்பு

மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை-பெங்களூரு விரைவு ரயிலின் பயண நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை-பெங்களூரு விரைவு ரயிலின் பயண நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்(12609/12610) ஜனவரி 15-ஆம் தேதி முதல் மைசூரு வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு வழக்கமான நேரமான இரவு 8.05 மணிக்கு கே.எஸ்.ஆர். பெங்களூரை சென்றடையும். அங்கிருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு மைசூரு சென்றடையும். 
மறுமார்க்கத்தில் இந்த ரயில் மைசூருவில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, கேஎஸ்ஆர் பெங்களூருக்கு காலை 7.45 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து காலை 8.02 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com