அதிமுக கூட்டணிக்கு வர பல கட்சிகள் விருப்பம்: அமைச்சர் டி.ஜெயக்குமார்

அதிமுக கூட்டணிக்கு வர பல கட்சிகள் முன்வந்திருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.


அதிமுக கூட்டணிக்கு வர பல கட்சிகள் முன்வந்திருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:
எப்படி சிண்டு முடிந்தாலும், பிரிக்க முடியாத மாபெரும் இயக்கமாக அதிமுக திகழ்கிறது. யாகம் வளர்த்தால் ஒருவர் முதலமைச்சராகிவிட முடியுமா? எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கேட்கும் அளவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றுவிட்டார்.
கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு திமுக அடைக்கலம் கொடுப்பது அம்பலமாகிவிட்டது. பத்திரிகையாளர் மேத்யூ, சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோருடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு குறித்து, விசாரணையில் தெரியவரும்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது கடுமையான நிதிப் பற்றாக்குறை இருந்தாலும், அதனை தமிழக அரசு சமாளித்து வருகிறது. நிதி நிலை சீராகும்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
தேர்தல் கூட்டணி: அதிமுக கூட்டணிக்கு பல கட்சிகள் முன்வந்திருக்கின்றன. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்ததும், கூட்டணி, தேர்தல் அறிக்கை என ஒவ்வொன்றுக்குமான குழு அமைக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com