சென்னை: தமிழகக் காவல்துறையினர் பணி நேரத்தில் செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக டிஜிபி வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், காவல்துறையினர் தங்களது பணி நேரத்தில் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து விட்டு பணியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு, கலவரப் பகுதிகளுக்குச் செல்வது போன்ற பல்வேறு வகையான பாதுகாப்புப் பணிகளுக்குச் செல்லும் காவல் ஆய்வாளர்கள், பாதுகாப்புப் பணிக்காக செல்போனை பயன்படுத்தலாம். செல்போன் பயன்பாடு குறித்த நடைமுறையை பின்பற்றாத காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.