சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி குறித்த கணக்குகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அவரையும் சேர்த்து ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.