சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை என்றும், மாலைக்குப் பிறகும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்ககள் மீது 17பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப இன்று காலை 9 மணி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.