சென்னை: பொக்ரான் சோதனை முதல் கார்கில் போர் வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணையாக நின்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்த செய்தி மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.
பொக்ரான் சோதனை முதல் கார்கில் போர் வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு துணையாக நின்றவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். அவரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.