அத்திவரதரை தரிசிக்க வாருங்கள்: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு அழைப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள் வருமாறு பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். 
அத்திவரதரை தரிசிக்க வாருங்கள்: எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு அழைப்பு


காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள் வருமாறு பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். 
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக அமைச்சர் ராமச்சந்திரன் பேசியது: நீருக்கு அடியில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப்  பிறகு இப்போது மீண்டும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் நடைபெறவுள்ளது. எனவே, அத்திவரதரை, உறுப்பினர்கள் அனைவரும் சென்று தரிசித்து ஆசி பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com