தமிழ்நாடு பத்திரிகை தொடர்பாளர்கள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொதுக்குழுக்கூட்டம் 30/6/2019 -ல் நடைபெற்றது.
இச்சங்கம் 2006-ல் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில் பணிபுரிபவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம். இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனின் அரசு பதிவு எண்=146/06.
விழாவில் உயர் திரு நீதிபதி S.ஆறுமுகம் அய்யா விருது வழங்க கல்வியாளர் உயர்திரு ஆதிமாறன் அவர்கள் சான்றிதழை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் பா.கோபாலகிருஷணன் தலைமை வகித்தார். இறுதியில் காஞ்சி மாவட்டப் பொருளாளர் திரு.கோ.விஜயன் நன்றியுரை நல்கினார்.
விழா நிகழ்ச்சிகளை களக்காடு வ.மாரிசுப்பிரமணியன் மாநில தலைவர் தொகுத்து வழங்கினார்.
- எஸ். வெங்கட்ராமன்