காட்பாடி தாலுக்காவில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

காட்பாடி தாலுக்காவில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
காட்பாடி தாலுக்காவில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

காட்பாடி தாலுக்காவில் புதிய அரசு மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காட்பாடியில் தாலுக்கா மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை முதல்வர் வழங்கியுள்ளார். 

இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து உதகை எம்.எல்.ஏ கணேஷ் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறினார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com