குற்றாலத்தில் மிதமான சாரல்: அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக இதமான சூழலுடன் சாரல் மழை பெய்வதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்துநிற்கும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்துநிற்கும் சுற்றுலாப் பயணிகள்.


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக இதமான சூழலுடன் சாரல் மழை பெய்வதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியது முதல் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. 
இந்நிலையில் கடந்த சில நாள்களாக குற்றாலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன்,  அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது. தற்போது பெய்து வரும் மிதமான சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com