திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக இதமான சூழலுடன் சாரல் மழை பெய்வதால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியது முதல் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக குற்றாலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது மிதமான சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது. தற்போது பெய்து வரும் மிதமான சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.