சட்டப் பேரவையில் புதன்கிழமை பதிலளித்துப் பேசும்போது இரண்டு பெண் அமைச்சர்கள் தங்களது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா பதிலுரையின் போது, தனக்கு உற்ற துணையாக இருக்கும் தனது கணவருக்கு நன்றி எனத் தெரிவித்தார். அப்போது, பேரவையில் சிரிப்பொலி எழுந்தது.
இதேபோன்று, தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கையைத் தொடங்குவதற்கு முன்பாக, தனக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார். அப்போது, அமைச்சரின் குடும்பத்தினர் பேரவையின் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.