ஏ.சி.சண்முகத்துக்கு ரூ.193.96 கோடி சொத்து

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், அவரது மனைவி லலிதா லட்சுமி ஆகியோர் பெயரில் மொத்தம் ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசையும் சொத்து: ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 28 கோடியே 49 லட்சத்து ஒரு ஆயிரத்து 470.63 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 22 கோடியே 81 லட்சத்து 61 ஆயிரத்து 501.22 மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.
இதில், ஏ.சி.சண்முகம் பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470, வங்கியிருப்பு ரூ. 79,19,627.63, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ. 24 கோடியே 89 லட்சத்து 6 ஆயிரத்து 680, இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 16 ஆயிரத்து 193, நகைகள் ரூ. 78 லட்சத்து 66 ஆயிரத்து 500, அவரது மனைவி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ. 9,21,230, வங்கியிருப்பு ரூ. 1 கோடியே 11 லட்சத்து 29 ஆயிரத்து 543.22, பங்கு பத்திரங்களில் முதலீடு ரூ.16 கோடியே 96 லட்சத்து 3 ஆயிரத்து 614, காப்பீட்டு முதலீடு ரூ.10 லட்சத்து 45 ஆயிரம், இதர முதலீட்டின் மீதான வருவாய் ரூ. 3 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 014, நகைகள் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரத்து 100 அடங்கும்.
அசையா சொத்துகள்: விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன. 
விவசாய நிலங்கள் அல்லாத இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் மொத்தம் ரூ. 41 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 34 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 638 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளன.
கடன் மதிப்பு: ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.11 கோடியே 91 லட்சம் கடன் இருப்பதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் ரூ.2.74 கோடி உயர்வு: வேலூர் மக்களவைத்  தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடக்க இருந்த தேர்தலையொட்டி ஏ.சி.சண்முகம் மார்ச் 22-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது வேட்புமனுவில் தனது குடும்ப சொத்து மதிப்பாக மொத்தம் ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27  மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
பின்னர், ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள ஏ.சி.சண்முகம் தனது குடும்பச் சொத்து மதிப்பாக ரூ. 193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், அவரது குடும்ப சொத்து மூன்று மாதங்களில் ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
கடன் மதிப்பு: அதே சமயம், கடன் மதிப்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 13 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம், அவரது மனைவி  பெயரில் ரூ. 9 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை ஒப்பிடுகையில் தற்போது கடன் மதிப்பு ஏ.சி.சண்முகம் பெயரில் ரூ. 43 லட்சத்து 88 ஆயிரத்து 052 குறைந்திருப்பதும், அவரது மனைவி பெயரில் ரூ. 2 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com