நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் யார் என்பது குறித்து திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த தகவலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
பேரவையில் வியாழக்கிழமை தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியது:
தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட அளவு வாக்குகள் நோட்டாவுக்கு விழுகின்றன.
இந்த வாக்குகள் யாருடையது என நினைக்கிறீர்கள். வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்களின் வாக்குகள்தான் அவை. அதனால், வேலைவாய்ப்பைப் பெருக்கி, அவர்களுக்கு வேலை அளியுங்கள் என்றார். அவர் இவ்வாறு குறிப்பிட்டபோது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.