சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியதும் (ஜூலை 12) கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள், கைவினைப் பொருள்கள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜி.பாஸ்கரன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சட்டப்பேரவை மாலை 4 மணிக்கு மீண்டும் கூடுகிறது. அப்போது, வேளாண்மைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களுக்கு அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.