வேலூர் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 15-ஆம் தேதி கூட உள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 15-ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் மாலை 5 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.