சென்னை: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இந்த சோதனையில் கணினி ஹார்டு டிஸ்க், முக்கிய ஆவணங்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய இரண்டு பேர் இன்று கிண்டி தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை மண்ணடியில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். வஹ்த்தே இஸ்லாமி ஹிந்த் என்ற கேரள அமைப்பின் அலுவலகத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனையைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராகுமாறு தாஜுதீன், இஸ்மாயில் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் சோதனை நடந்த அதே நேரத்தில் நாகையிலும் ஒரு சில இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.